காட்டு யானை தாக்கி 35 வயதுடைய ஒருவர் உயிரிழப்பு!!

269

1 (40)

மஹஓய, புலாவல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கரதான குளத்திற்கு அருகில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 35 வயதுடைய மஹஓய, சமகிபுர பிரதேசத்தில் வசிக்கக்கூடிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹஓய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.