13 வயது சிறுமி கொலை – மூன்று பேர் கைது!!

1029

murder

மாவத்தகம, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 47 வயதுடைய பிரதான சந்தேகநபர் உட்பட மூன்று பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி நேற்று பிற்பகல் வீடொன்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார். சந்தேகநபர்கள் இன்று குருணாகல், பிளெஸ்ஸ நீதிவான நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுற்றனர்.