பாடசாலை சீருடை வவுச்சர் காலாவதியாகும் திகதி நீடிப்பு!!

300

School.material.uniform

2016.01.31 ம் திகதியுடன் காலாவதியாக இருந்த பாடசாலை மாணவர்களின் சீருடை வவுச்சர் பெப்ரவரி மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர்களுக்காக பணம் வழங்கும் வங்கிகளுக்கு இது தொடர்பில் அறிவித்தல் விடுத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள அதேவேளை அதற்காக சீருடை பெற்றுக் கொள்ள முடியுமான காலம் இம்மாதம் 31ம் திகதி வரையில் காணப்பட்டது.

எவ்வாறானும் குறித்த காலத்திற்குள் தமக்கான சீருடைகளை பெற்றுக் கொள்ள முடியாது போன மாணவர்களின் நலன் கருதி அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.