மெகா பொலிஸ் நகர அபிவிருத்தி செயற்திட்டம் ஆரம்பம்!!

279

1454053517_7019431_hirunews_megapolis

கொழும்பு – கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைக்கும் மெகா பொலிஸ் எனப்படும் மேல் மாகாண பாரிய நகர அபிவிருத்தி செயற்திட்டத்தை விஸ்தரிக்கும் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின.

இதன் ஆரம்ப நிகழ்வாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நா கன்றுகளை நாட்டினர்.15 வருட காலப்பகுதியினுள் நிறைவுறுத்தப்படவுள்ள இந்த செயற்திட்டத்திற்காக 40 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது.