தனது 10 வயது மகளை பந்தயப் பொருளாக வைத்து சூதாட்ட விளையாட்டு விளையாடி தோற்ற தந்தையொருவர் தொடர்பில் ரஷ்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.ரஷ்யாவின் தூர கிழக்குப் பிராந்தியமான வொலோசெவ்காவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் பசுரின் (30 வயது) என்ற மேற்படி தந்தை, தனது மகளான எகரெறினா பசுரினாவை பந்தயப் பொருளாக வைத்து செர்கேயி பொனாமெரோவ் (40 வயது) என்பவருடன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு தோற்றுள்ளார்.
இதனையடுத்து சூதாட்டத்தில் வெற்றி பெற்ற செர்கேயி, எகரெறினா கல்வி கற்கும் பாடசாலைக்கு சென்று அவரைத் தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.இந்நிலையில் பாடசாலை நிர்வாகமும் சிறுமியின் தாயரும் சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக செய்த முறைப்பாட்டையடுத்து செர்கேயியை கண்டுபிடித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த சூதாட்ட விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முன் னெடுத்துள்ளனர்.