உடல் வறட்சியடைவதைத் தடுக்க சிறந்த வழி தண்ணீர் குடிப்பது தான். அதிலும் தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதால், உடலின் நீர்ச்சத்து சீராகப் பராமரிக்கப்படும். பகலில் தண்ணீர் குடிப்பது போல, இரவில் நம்மால் தண்ணீர் குடிக்க முடியாது. இருந்தாலும் இரவில் உடலுறுப்புகளின் செயல்பாடு அதிகம் இருக்காது என்பதால், அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. இருப்பினும் தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், மறுநாள் காலையில் எழும் போது நல்ல புத்துணர்ச்சியை உணரக்கூடும்.
தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதுடன், இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடியுங்கள். இதனால் பகல் நேரத்தை விட, இரவில் உடல் சுத்தமாவதுடன் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் வேகமாக சுத்தமாகும்.இரவில் குடிக்கும் தண்ணீர் உடலில் விற்றமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இரவில் உடல் எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடாமல் ஓய்வில் இருப்பதால், தண்ணீரானது உடலிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் செல்லும். நல்ல நித்திரைக்கும் வழிவகுக்கும்.
தண்ணீரில் கலோரிகள் இல்லை, சுவையில்லை மற்றும் வேறு எதுவும் இல்லை. ஆனால், இது உடலை சீரான இயக்கத்தில் செயல்பட செய்யும். அதிலும் இரவில் குளிர்ந்த நீரைக் குடித்தால், கலோரிகள் எரிக்கப்படும். இப்படி கலோரிகள் எரிக்கப்பட்டால், உடல் எடை தானாக குறையும்.
இரவில் படுக்கும் போது நிறைய பேர் தசைப்பிடிப்புகளால் அவஸ்தைப்படுவார்கள். உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாமையே இதற்குக் காரணம். தினமும் தூங்கும்முன் தண்ணீர் அருந்தினால் உடலில் நீர்ச்சத்து சீராக பராமரிக்கப்பட்டு, தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.