மீனவர் ஒருவர் தீ மூட்டி தற்கொலை முயற்சி!!

591

fire

இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புதுச்சேரி மீனவர் ஒருவர், தமக்கு தாமே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான மீனவர்கள் காரைக்காலில் ஒன்று கூடி நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தனர்.தங்களை கைது செய்வதை நிறுத்துமாறும், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களின் படகுகளை விடுவிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதன்போது குறித்து மீனவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.எனினும் அவர் சக மீனவர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.