நகரங்களில் வாழும் மக்கள் அழகிய எண்ணங்களுடன் வாழ வேண்டும்!!

493

1 (67)

அழ­கிய நக­ரங்­களை உரு­வாக்­கு­வது மட் டும் போதாது, அந் நக­ரங்­களின் வாழும் மக்கள் அழ­கிய எண்­ணங்­க­ளு­ட­னான மக்­க­ளாக வாழும் நிலையை ஏற்­ப­டுத்த வேண்டும் எனத் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நகர அபி­வி­ருத்­தி­யின்­போது “சூழல் பாது­காப்பு” கட்­ட­யா­மாக கடை­ப்பி­டிக்­கப்­பட வேண்டும் என்றும் அறி­வுரை வழங்­கினார்.

மேல் மாகாணம் மற்றும் கொழும்பு பெரு நகர அபி­வி­ருத்தி திட்டம் நேற்று வெள்ளிக்­கி­ழமை கொழும்பு சுதந்­திர சதுக்­கத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியி­டப்­பட்­டது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

நாட்டில் அழகிய நக­ரங்கள், அபி­வி­ருத்தி அடைந்த நக­ரங்­களை உரு­வாக்க வேண்டும். அதே­வேளை அந்த அழ­கிய நக­ரங்­களில் வாழும் மக்­களும் அழ­காக இருக்க வேண்டும். நான் புற அழகை கூற­வில்லை. மாறாக அவர்­க­ளது மனங்கள் அழ­கிய எண்­ணங்கள் கொண்­ட­தாக அமைய வேண்டும்.

இலங்கை இறை­யாண்மை கொண்ட சுதந்­திர நாடு. எனவே, அதனை பாது­காத்துக் கொண்டே அனைத்தும் முன்­னெ­டுக்ப்­பட வேண்டும். விசே­ட­மாக அபி­வி­ருத்­தி­களின் போது மரங்­களை வெட்டி, செடி­களை அழித்து அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ளல் ஆகாது. சூழலைப் பாது­காத்துக் கொண்டே அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண் டும். இவ்­வி­ட­யத்தில் அனை­வரும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

நாட்டில் இரண்டு பிர­தான கட்­சிகள் இணைந்து இன்று ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் இவ் ஆண்­டி­லி­ருந்து எமது நாட்டின் பொரு­ளா­தாரம் உட்­பட அனைத்து அபி­வி­ருத்­தி­க­ளையும் துரி­தப்­ப­டுத்தி முன்­னெ­டுப்போம். வெறு­ம­னே இந்த அபி­வி­ருத்­திகள் கொழும்பு நக­ரங்­க­ளுக்கு மட்டும் வரை­ய­றுக்­கப்­ப­டாது நாடு முழு­வதும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

அபி­வி­ருத்­தியின் போது மக்கள் சுதந்­தி­ர­மாக, மகிழ்ச்­சி­யுடன் வாழும் நிலையில் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அறி­வுசார் புறச் சூழல் அனைத்­திலும் கடை­ப்பி­டிக்க வேண்­டும். வெறு­ம­னே கட்­டட அபி­வி­ருத்­திக்குள் மட்டும் சிக்கிக் கொள்­ளாது கல்வி, பொரு­ளா­தா­ரத்­துறை, மக்­களின் அடிப்­படைத் தேவை­களும் அபி­வி­ருத்தி செய்­யப்­பட வேண்டும் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.இந் நிகழ்வில் அமைச்­சர்கள், கொழும்பு மாநகர மேயர், மேல் மாகாண முத­ல­மைச்சர், எம்.பி.க்கள் மற்றும் வெளிநாட்டு தூது­வர்கள், உள்­நாட்டு வெளிநாட்டு முத­லீட்­டா­ளர்­களும் கலந்து கொண்­டார்கள்.