இங்கிலாந்தில் 18 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

263

130613135105-stolen-smart-phone-1024x576

இங்கிலாந்தில் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 18 பள்ளிக்கூடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் நேரப்படி காலை 8 மணியளவில் பள்ளி கூடங்களுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உடனடியாக போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.

இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் கடந்த செவ்வாய் கிழமை இங்கிலாந்து நாட்டின் 14 பள்ளிக்கூடங்களுக்கு விடப்பட்டது. ஆனால் அது வெறும் புரளி என பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், போலீசார் பள்ளி கூடங்களில் சோதனையிட்டனர். இந்த மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த வாரத்தில் 3வது முறையாக இங்கிலாந்து நாட்டு பள்ளிக்கூடங்களுக்கு விடப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும். கடந்த செவ்வாய் கிழமை மேற்கு மிட்லேண்டில் உள்ள 4 பள்ளிக்கூடங்களுக்கு மிரட்டல் விடப்பட்டது. அதன்பின் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் நகரங்களில் உள்ள தலா 4 பள்ளிக்கூடங்களுக்கும் மற்றும் கார்ன்வால் நகரத்தின் 4 பள்ளிக்கூடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களை இலக்காக கொண்டு குறைந்தது 18 பள்ளி கூடங்களுக்கு இன்று மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்த மிரட்டல்கள் போலியானவை என போலீசார் கூறியுள்ளனர். இன்று மதியம் சில பள்ளி கூடங்கள் மாணவர்கள் திரும்பியதை அடுத்து செயல்பட தொடங்கின.