முல்லைத்தீவில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் பலி!!

377

 
முல்லைத்தீவு – நட்டாங்கண்டல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவர் 50 வீட்டுத்திட்டம் பாண்டியன்குளம் நட்டாங்கண்டல் பகுதியை சேர்ந்தவரான 35 வயதுடைய சந்திரபாலன் சந்திரகுமார் என தெரியவருகின்றது.

அத்தோடு, காயமடைந்தவரான நட்டாங்கண்டல் பகுதியை சேர்ந்த தங்கராசா குணதீபன் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இருவரும் மதுபானசாலையில் ஒன்றாக இணைந்து மது அருந்தியதாகவும், பின்னர் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

1 2 3