பெருந்தொகை போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது!!

256

1482602658Untitled-1

அம்பலன்கொட – மெதம்பாகம பிரதேசத்தில் இருந்து பெருந் தொகை போதைப் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று மாலை 05.15 அளவில் அம்பலன்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 20 கிலோ 876 கிராம் ஹெரோயின் இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஒருகிலோ 100 கிராம் கேரளா கஞ்சாவும் இதன்போது பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை இன்று பலபிடிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.