சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை கொண்டு விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் என்ற தொடரை அறிமுகப்படுத்தினார். இதில் 6 அணிகள் இடம்பிடித்துள்ளன. 6 அணிகளிலும் சேவாக், லாரா, முத்தையா முரளிதரன், கில்கிறிஸ்ட், ஸ்மித், ஜொன்டி ரோட்ஸ் போன்ற ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளனர்.
மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 தொடர் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கியது. இதில் 6 அணி வீரர் களும் கலந்து கொண்டனர்.ஜெமினி அரேபியன்ஸ் அணியில் முத்தையா முரளிதரன் இடம்பெற்றுள்ளார். லியோ லயன்ஸ் அணியில் பிரையன் லாரா இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் பழைய சர்வதேச போட்டி குறித்து முத்தையா முரளிதரன் நினைவு கூர்ந்தார்.அப்போது அவர் கூறும் போது ‘‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான துடுப்பாட்ட ஜாம்பவான்களுக்கு பந்து வீசியுள்ளேன். ஆனால், லாராவிற்குதான் பந்து வீசுவது மிகவும் கடி னமாக இருந்தது. அவருக்கு எதிராக அதிக அளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். சுழற்பந்தை துவம்சம் செய்வதில் லாரா மிகச்சிறந்தவர் என்றார்.