கோலியை டோனியுடன் ஒப்பிடுவது தவறு : டிராவிட்!!

587

Rahulமைதானத்தில் செயல்படுவதில் விராட்கோலி இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில்,

விராட்கோலியை டோனியுடன் ஒப்பிடுவது தவறானதாகும். இருவரும் வித்தியாசமான நபர்கள். மைதானத்தில் தனது செயல்பாடு குறித்து விராட்கோலி சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். மைதானத்தில் செயல்படுவதில் விராட்கோலி இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும்.

சிம்பாவேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய பிடியால் ஆட்டம் இழந்த போது விராட்கோலி உணர்ச்சியை வெளிப்படுத்திய விதம் தவறானது. கோபத்தை குறைத்து அவர் வேறு மாதிரியாக நடந்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விராட்கோலி சிறந்த வீரர் என்றாலும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.