இலங்கை தென்னாபிரிக்க 5வது போட்டியின் போது பந்தயத்தில் ஈடுபட்ட மூவர் கைது!!

671

sl

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியின் போது பந்தயத்தில் ஈடுபட்ட மூன்று மும்பை சூதாட்டக்காரர்களை கோவா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹித்தேஸ் ஜதாகியா, சுனில் சுக்லா மற்றும் ஹித்தேஸ் தேசியா ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கோவா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கணினி 16 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை சந்தேகநபர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது