சம்மாந்துறையில் பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம்!!

281

FB_IMG_1454433912531

நீண்ட கால­மாக சம்­மாந்­துறை பிர­தே­சத்தில் ஒரு பொழு­து­போக்கு வலயம் இல்­லாத குறையை நிவர்த்­திக்கும் முக­மாக அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், மாவட்ட அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்பு குழுத் தலை­வ­ரு­மான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகா­தார அமைச்­ச­ராக இருந்த போது பிர­மாண்­ட­மான பொழு­து­போக்கு வலயம் அமைப்­ப­தற்­கான காணிகள் அடை­யாளம் காணப்­பட்டு இருந்­த­துடன் அதற்­கான பூர்­வாங்க நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.

தற்­போது பிர­மாண்­ட­மான பொழு­து­போக்கு வலயம் அமைப்­ப­தற்­கான அடை­யாளம் காணப்­பட்ட காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான ஆலோ­சனைக் கூட்­ட­மா­னது சம்­மாந்­துறை பிர­தேச செய­ல­கத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தலை­மையில் இடம்­பெற்­றது.

இவ்­வா­லோ­சனைக் கூட்­டத்தில் பிர­தேச செய­லாளர் ஏ.மன்சூர், மாவட்ட நில அள­வை­யாளர் ரபீக், உதவி காணி ஆணை­யாளர் திரு­மதி.இப்­திகார் லத்திப், மாவட்ட காணி உத்­தி­யோ­கத்தர் முசம்மில் உட்­பட சம்­பந்­தப்­பட்ட திணைக்­கள அதி­கா­ரி­களும், உத்­தி­யோ­கத்­தர்­களும் கலந்து கொண்­டனர்.சுவி­க­ரிக்­கப்­படும் 31 ஏக்கர் காணியில் மலர்ப்­பூங்கா, நவீன மய­மான சிறு­வர்­க­ளுக்­கான விளை­யாட்­டுத்­தொ­குதி, நீர்த்­த­டாகம், சுற்­றி­வர நிழல்­தரும் மரங்கள், கடைத்­தொ­கு­திகள் உட்­பட ஏரா­ள­மான பொழு­து­போக்கு அம்­சங்­களை கொண்ட பிர­மாண்­ட­மான வல­ய­மாக உரு­வாக்­கப்­பட இருக்­கி­றது.குறித்த பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம்.சம்மாந்துறையில் அமையப்பெறும் பட்சத்தில் பல்லாயிரக்கனக்கான மக்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.