அமெரிக்காவில் உள்ள சிகாகோவை சேர்ந்தவர் லியோன் டேக் (வயது 18). இவர் தனது வீட்டுக்குள் நுழைந்த பூனை மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றினார். அதில் உடல் வெந்து அந்த பூனை துடி துடித்தபடி அங்கும்–இங்கும் ஓடியது. வேதனை தாங்காமல் கதறியது. இந்த காட்சிகளையெல்லாம் வீடியோவில் படம் எடுத்து அதை சமூக வளைதளத்தில் வெளியிட்டார்.
அதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பூனை மீது வெந்நீரை ஊற்றியது யார்? என இணையதள முகவரி மூலம் விசாரித்தனர். அதில் லியோன் டேக் வெந்நீரை ஊற்றியது தெரிய வந்தது. அதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர்.