இந்திய அணியை பந்தாடிய இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

236

 
எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் சண்டிமால் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.

இலங்கை அணியின் இளம் பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 31 ஓட்டங்களையும் , சுரேஷ் ரெய்னா 21 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 10 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இவர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 18.5 ஓவர்களில் 101 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து 102 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. இருப்பினும் அணித் தலைவர் சண்டிமால் மற்றும் கப்புகெதர ஆகியோர் நிதானமாக ஓரளவு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சண்டிமால் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கப்புகெதரவும் 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பந்து வீச்சுக்கு மைதானம் சாதகமாக காணப்பட்டதால், இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை சேர்க்க தடுமாறினர்.

இருப்பினும் இலங்கை அணி 18 வது ஓவரில் 105 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இலங்கையின் அறிமுக பந்து வீச்சாளர்கள் ராஜித, சானக ஆகியோர் அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக கசுன் ராஜித தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 தொடர்கள் கொண்ட போட்டியில் இலங்கை 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது T20 போட்டி வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது.

IND SJ5 SL1 Sl2 SL3 SL4