பறக்கும் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்: பாதி வழியில் இறக்கிவிட்ட விமானி!!

266

The-plane-flying-at-sunset-airliner-photography_1920x1080 (1)

அல்ஜீரியா தலைநகர் ஆல்ஜியர்ஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபரை பாதி வழியில் விமானியால் இறக்கி விடப்பட்டார்.அல்ஜீரியா தலைநகர் ஆல்ஜியர்ஸ் பகுதியில் இருந்து பாரிஸ் நோக்கி சென்ற விமானத்தில் பயணி ஒருவர் புகைக்க அனுமதி கேட்டு நச்சரித்து வந்துள்ளார்.

மேலும் தம்மை மது அருந்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் விமான ஊழியர்களிடம் பிரச்னை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் விமான ஊழியர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்காததை அடுத்து தனது சட்டையை கழற்றி வீசிவிட்டு வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

விமான ஊழியர்களும் சக பயணிகளும் பல முறை அவரை எச்சரித்தும் கண்டுகொள்ளாத அந்த நபர் திடீரென்று,சக பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்துள்ளது அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.இதனையடுது அந்த நபரை குண்டுக்கட்டாக தூக்கிய விமான ஊழியர்கள் அவரது கை கால்களை கட்டி வைத்து Lyon பகுதியில் இறக்கி விட்டுள்ளனர்.

மொத்தம் 90 நிமிட பயணத்தினிடையே அந்த நபருக்கு புகைக்கவும் மது அருந்தவும் அனுமதி மறுக்கப்பட்டதால் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.ல்யோன் விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்த பொலிசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.இதனையடுத்து எஞ்சிய பயணிகளுடன் குறிப்பிட்ட நேரத்தைவிட தாமதமாக அந்த விமானம் அங்கிருந்து புறப்பட்டு பாரிஸ் சென்றுள்ளது.