12 வருடங்களுக்கு பின்பு பேஸ்புக்கால் ஒன்றுசேர்ந்த குடும்பம் (வீடியோ இணைப்பு)!!

409

இந்திய புனே நகரில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்த நபர் ஒருவர் தற்போது பேஸ்புக் மூலம் ஒன்று சேர்ந்துள்ளார்.

புனேயில் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சரியாக படிக்கவில்லை என்று தாய் திட்டியதால் மனம் உடைந்து வீட்டை விட்டு வெளியேறினான் சிறுவன் அங்குஷ் டேமேல்.

அப்போது வீட்டில் இருந்து வெளியேறியவன் நேராக குருத்வாரா கோயிலுக்குச் சென்று அங்கு கோயில் திருப்பணிகளை செய்து வந்தான். அங்கிருந்த குரு ஒருவர் அவனுக்கு குர்பன் சிங் என்று பெயரிட்டு அவனை பராமரித்து வந்தார். அந்த சிறுவனும் தலையில் துணி ஒன்றைக் கட்டிக் கொண்டு நீண்ட தாடியுடன் சிங்காக மாறினான்.

இதனைத் தொடர்ந்து பல வழிகளில் தனது குடும்பத்தாரை தேடும் பணியிலும் ஈடுபட்டு வந்தான். இந்நிலையில் பேஸ்புக்கின் வழியாக தன்னை விட இரண்டு வயது குறைந்த தனது சகோதரனின் சந்தோஷ் என்ற பெயரை தேடி அவனை தொடர்பு கொண்டு தன்னை பற்றி கூறியுள்ளான்.

அங்குஷ் தனது குடும்பத்தாரை சந்திப்பதற்கு குருவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தலையில் துணியுடனும் , தாடியுடனும் பார்த்த குடும்பத்தாருக்கு அங்குஷின் தோற்றம் விசித்திரமாக இருந்தாலும், அவனது நினைவுகள் அவர்களை ஒன்று சேர்த்துள்ளது.