கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி: அப்ரிடி!!

343

shahid-afridi

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கிண்ணத்தை கைப்பற்றியது எங்களது அணிக்கு கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கைப்பற்றியது. மேலும் டுவென்டி-20 தொடரிலும் 2-2 என முழுமையாக வென்றது.

இந்நிலையில் இதன் மூன்றாவது மற்றும் ஐந்தாவது போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்றில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்ரிடி கூறுகையில் எங்கள் அணியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இது.

இப்போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதை யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை. இப்படி கூறுவதால் எங்களது மன வலிமை ஒன்றும் குறையபோவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

சயீத் அஜ்மல் கூறுகையில் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் எங்களின் செயல்பாடு மோசமாக இருந்தது. எனவே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற கடுமையாக போராடினோம்.

ஏனெனில் இந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல, இந்த வெற்றியை எண்ணி நாங்கள் பெருமை அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.