நெடுங்கேணி வைத்தியசாலை அம்புலன்ஸ் பழுதடைந்துள்ளமையால் நோயாளர் அவதி!

628

4554102594_b5f27c5993

வவு­னியா நெடுங்­கேணி வைத்­தி­ய­சா­லையில் கடந்த ஒரு மாத­கா­ல­மாக அம்­பி­யுலன்ஸ் இன்­மையால் நோயா­ளர்கள் பெரும் சிர­மத்தை எதிர்­கொண்டு வரு­வ­தாக தெரிவிக்­கப்­ப­டு­கின்­றது. இவ் வைத்­தி­ய­சா­லையின் அம்­புலன்ஸ் பழு­த­டைந்­துள்ள நிலையில் ஒரு மாத­மா­கியும் திருத்தம் செய்­யப்­ப­டாத நிலையில் புளி­யங்­குளம் வைத்­தி­ய­சா­லையின் அம்­புலன்ஸ் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

எனினும் புளி­யங்­குளம் வைத்­தி­ய­சா­லையின் அம்­புலன்ஸ் ஓமந்தை, நவ்வி, புளி­யங்­குளம். நெடுங்கேணி ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கும் சேவையில் ஈடு­பட வேண்­டி­யுள்­ள­மையால் நோயா­ளர்கள் வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்கு செல்­வ­தானால் நீண்ட நேரம் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை­யுள்­ள­தா­கவும் தெரிவிக்­கின்­றனர்.

வட மாகா­ணத்தில் அவ­சர அம்­புலன்ஸ் சேவை செயற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் ஒரு மாத­கா­ல­மா­கியும் அம்புலன்ஸ் திருத்தம் செய்யப்படாமல் உள்ளமை தொடர்பிலும் நெடுங்கேணி பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.