யால தேசிய பூங்காவுக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை!!

577

Yala_National_Park_

யால தேசிய பூங்காவிற்குள் நுழையும் வாகனங்களில் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கபடவுள்ளதாக வன இலாகா தெரிவித்துள்ளது.மேலும் நாளொன்றுக்கு 700 வாகனங்கள் இந்தப் பூங்காவினுள் உள் நுழைவதாகவும் வன இலாகா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரசிரி பண்டார தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கையின் கட்டுபாட்டுக்கமைய தற்போது மூடப்பட்டிருக்கும் கல்கே நுழைவாயிலை திறப்பதற்கும் உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.