வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு – 1(அ)பிரிவில் தமிழ் புவியியல் பொருளியல் விஞ்ஞானம் தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக இடம்பெற்ற போட்டிபரீட்சையில் சித்தியெய்தி எதிர்வரும் 16.02.2016 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நேர்முகத்தேர்விற்கு அழைக்கபட்டுள்ள வவுனியா மாவட்ட பட்டதாரிகள் விபரம் இணைப்பு!
இந்த லிங்கை கிளிக் செய்து முழுமையான விபரத்தை பார்வையிடவும் Results District- Results District- Vavuniya
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்கள் வெற்றிடத்தை பட்டதாரிகள் மூலம் நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை முதல் வடமாகாண கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக பட்டதாரிகளுக்கு போட்டிப் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டது. இதற்கமைய பரீட்சை பெறுபேற்றிற்கு ஏற்றவாறு வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.
இந்த நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்படும் பட்டதாரிகள் ஆசிரிய சேவை 3.1 (அ) விற்கு நியமனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.