இறந்த பெண்ணுக்கு 3 மாதம் கழித்து குழந்தை பிறந்த அதிசயம்..!

575

amazing-baby

கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்து மூன்று மாதங்கள் கழித்து குழந்தையை பெற்றெடுத்துள்ள அதிசய சம்பவம் ஒன்று இத்தாலியில் இடம்ப்பெற்றுள்ளது. இத்தாலியிலுள்ள மில்லன் நகரின் சான் ராபெல் என்னும் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்(36) ஒருவர் திடீரேன உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

6 மாதம் கர்ப்பிணியான அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் கருவில் உள்ள குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என தீர்மானித்த மருத்துவர்கள் அவருக்கு 3 மாதங்களாக மருத்துவக் கருவிகள் மூலம் செயற்கையாக பெண்ணின் உடல் உறுப்புகளை இயங்கச் செய்துள்ளனர்.இதன்பின் அறுவை சிகிச்சை மூலம் அவரின் வயிற்றில் இருந்து, ஆண் குழந்தையை ஆரோக்கியமாக வெளியில் எடுத்துள்ளனர். 1.8kg எடையுடன் குழந்தை, நல்ல உடல் நலத்துடன் இருகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.