கபொத சாதாரண தர நடைமுறை பரீட்சை 3ம் திகதி!!

257

Exam

2015ம் ஆண்டு கபொத சாதாரண தரப் பரீட்சைக்கு அழகியல் பாடத்திற்கு சம்பந்தமான நடைமுறை பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி இடம்பெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் உள்ள 1205 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைமுறை பரீட்சை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சத்து 61,651 பேர் நடைமுறை பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகளின் பரீட்சை அனுமதிப் பத்திரம் அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.