காதலனை மின் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலி: ஜேர்மனியில் பயங்கரம்!!

262

bloody_knife

ஜேர்மனி நாட்டில் தனது முன்னாள் காதலனை மரங்களை அறுக்கும் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முனிச் நகருக்கு கிழக்கில் உள்ள ஹார் என்ற பகுதியில் பெயர் வெளியிடப்படாத 31 வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.இந்த பெண்ணிற்கும் 35 வயதான நபர் ஒருவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சில காரணங்களால் இந்த காதல் முறிந்ததாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு பிறகு, 2008ம் ஆண்டுகளில் காதலனை காணாமல் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.இரண்டு ஆண்டுகள் கழித்து 2010ல் ‘காணாமல் போன நபரை பார்த்ததாக’ உறவினர்களுக்கு வந்த தகவலை தொடர்ந்து அவர் உயிருடன் தான் இருக்கிறார் என உறவினர்கள் நம்பியுள்ளனர்.

ஆனால், 3 வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன நபரின் முன்னாள் காதலி குறித்து பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் நடவடிக்கைகளை பொலிசார் உன்னிப்பாக கவனித்து வந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று பொலிஸ் பட்டாளத்துடன் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது தோட்டத்தை தோண்டியுள்ளனர்.

அப்போது, உள்ளே பாலித்தீன் பைகளில் காதலனின் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனடியாக முன்னாள் காதலியை பொலிசார் கைது செய்தனர். கொல்லப்பட்ட நபரின் உடல் உறுப்புகளை பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் அறிக்கை வெளியிட்டனர். அதில், காணாமல் போன நபரை, அவரது முன்னாள் காதலி, தற்போதைய காதலன் மற்றும் வேறொரு நபரின் உதவியுடன் கொலை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போதும் மூவரும் பொலிசார் விசாரணையில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.