ஆற்றில் மூழ்கி கொண்டிருந்த காரில் இருந்த தாய், குழந்தைகளை காப்பாற்றிய இளைஞர்கள்!!(வீடியோ)

302

Aaru

நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்டர்டாமில் ஷிங்கெல் ஆறு ஓடுகிறது. இந்த ஐஸ் கட்டி போன்று குளிர்ச்சியாக காணப்படும். இந்த ஆற்றின் கரையோரம் உள்ள கடைக்கு ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் ஷாப்பிங் செய்ய வந்தார். அப்போது அந்த ஆற்றின் கால்வாய் ஓரம் உள்ள பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தினார்.

அப்போது தனது குழந்தையுடன் மீது மாட்டியிருந்த கார் சீட் பெல்டை கலற்றி முயற்சி செய்தார். அப்போது திடீரென கார் தன்னிச்சையாக நகர்ந்து கால்வாய்க்குள் பாய்ந்தது.

கார் பாய்ந்ததும் மெதுமெதுவாக மூழ்க ஆரம்பித்தது. அப்போது அருகில் நின்ற இளைஞர்கள் சிலர் தங்களது சட்டையை கழற்றிவிட்டு கால்வாய்க்கும் ஒவ்வொரு பக்கமாக இருந்து தண்ணீருக்குள் பாய்ந்து காரை நோக்கி நீந்தி சென்றார்கள்.

அப்போது ஒரு இளைஞர் கல்லால் கார் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தார். ஆனால், கண்ணாடியை உடைக்க முடியவில்லை. அதே நேரத்தில் கார் மெதுவாக தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்தது. இறுதியில் இளைஞர்கள் காரில் இருந்து தாய் மற்றும் குழந்தையை மீட்டு கரை சேர்த்தனர். ஆனால், கார் தண்ணீருக்குள் முழுவதுமாக மூழ்கிறது.