ஆறு வயது சிறுவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து பலி!!

629

swimming-pool-renovation2

பதுரலிய பிரதேசத்தில் ஆறு வயது சிறுவனொருவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் உறவினர்கள் சிலருடன் சுற்றுலாவிற்காக வருகை தந்து அங்கு தங்கியிருந்த விடுமுறை விடுதியொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்தே சிறுவன் உயிரிழந்துள்ளான்.

பாயகல பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.