
மகளை வல்லுறவுக்கு உட்படுத்தி தலைமறைவாக இருந்து வந்த தந்தை ஒருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் சாந்தினி மீ கொட முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கம்பளை அலாகம கிராமத்தில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவதினம் பாதிக்கப்பட்ட 18 வயது யுவதியின் தாய் சிறிய மகளுடன் கடைக்குச் சென்றிருந்த நிலையில் குறித்த யுவதி 38 வயது தந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இச் சந்திர்ப்பத்திலேயே குறித்த யுவதி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக மேற்படி யுவதியின் தாயினால் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியப்போதே மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தார்.





