பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!!

271

stone_is_003

தங்கள் வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் ஷரியா சட்டமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.அந்த சட்டத்தின் படி குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் ஈராக்கின் மொசூல் நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.தங்களது வீரர்களால் கற்பழிக்கப்பட்ட அந்த பெண்களை ஷரியா நீதிமன்றத்தின் முன் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிறுத்தியுள்ளனர்.மேலும் அப்பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதேவேளையில் அவர்களை கற்பழித்த ஐ.எஸ். வீரர்கள் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக விசாரித்த ஷிரியா நீதிமன்ற தலைவர்கள் அப்பெண்களை கல்லால் அடித்து கொலை செய்யும்படி தீர்ப்பு வழங்கினர்.இதனையடுத்து திரளாக திரண்டிருந்த மக்கள் முன்பாக நான்கு பெண்களும் கல்லால் அடித்து கொல்லப்பட்டனர்.

இஸ்லாமிய சட்டத்தின்படி திருமணமான ஆணோ பெண்ணோ வேறு ஒருவருடன் உறவில் ஈடுபட்டால் அவர்கள் கல்லால் அடித்து கொல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில நாட்களாகவே , ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள சிரியா, ஈராக், மற்றும் தலிபான் தீவிரவாதிகள் வசமுள்ள ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கல்லால் அடித்து கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.