ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் மாற்றமில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 7ம் திகதி வரையில் போட்டித் தொடர் நடைபெறும்.
போட்டிகளிலிருந்து தமது அணியை விலக்கிக் கொள்வதாக எந்தவொரு அணி உரிமையாளரும் இதுவரையில் அறிவிக்கவில்லை.
எனவே திட்டமிட்டவாறு போட்டித் தொடர் நடைபெறும் என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கிரிக்கட் ஆட்ட நிர்ண தொடர்பில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து இலங்கையில் ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டித் தொடர் நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டிருந்தது.