பிரித்தானியாவில் வொடோங்கோ எனும் இடத்திலுள்ள பாம்புப் பண்ணையில் நீண்ட கழுத்தைக் கொண்ட அபூர்வ இரட்டைத் தலைப் பாம்பு பிறந்துள்ளது.
ஜோன் மக்நமாரா என்பவருக்கு சொந்தமான பண்ணையிலிருந்த 5 வயதான பாம்பு ஒன்றால் இடப்பட்ட 10 முட்டைகளில் ஒரு முட்டையிலிருந்தே இந்த இரட்டைத் தலைப் பாம்பு வெளியாகியுள்ளது.
இது ஒட்டிப் பிறந்த இரட்டைப் பாம்புகள் என நம்பப்படுகிறது.இந்நிலையில் மேற்படி இரட்டைத் தலை பாம்புகளுக்கு கதனா மற்றும் வகிஸாஷி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.