
கல்கிரியாகம, ஏழாம் குளக்கட்டுச் சந்தியில் வைத்து, இனந்தெரியாத நபர்களினால் கத்திக்குத்துக்கு இலக்காகி 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.இக்கொலைச் சம்பவம், நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர், புந்துகேஹின்ன, தேவஹுவ பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர் தப்பியோடியுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





