ஈசி காஸ் மூலம் பணத்தை செலுத்துமாறு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!!

313

Dialog-eZ-Cash

ஈசி காஸ் மூலம் பணத்தை செலுத்தமாறு நபர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பேலியாகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த சந்தேக நபரை நேற்றைய தினம் (16) 2 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், குருநாகல் நகரின் சிங்கப்பூர் டெலிசொப் என்ற தொலைபேசி நிறவனத்திற்கு அருகில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாகவும்,42 வபயதான குறித்த நபர் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார் இவரிடமிருந்து 1 இலட்ச ரூபாய் பணத்தையும், 2 கைத்தொலைபேசிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.அத்துடன் சந்தேகநபரை இன்று அளுத்கட ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.