இலங்கை நாடாளுமன்ற அமைந்துள்ள கட்டடத்தை முழுமையாக நவீனமயப்படுத்தவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடமைப்பு தொகுதியை ஒன்றை நிர்மாணிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமர் டி.எம்.ஜயரட்ன அமைச்சரவையில் தாக்கல் செய்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் நாடாளுமன்றத்தை நவீனமயப்படுத்தும் புனரமைப்பு நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட்ட சுமிடோமோ மிட்சுய் என்ற ஜப்பானிய நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.