ஓடும் விமானத்தில் 30 பேருக்கு திடீர் வாந்தி,வயிற்றுப்போக்கு!!

358


qantas

சன்டியாகோவிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 30 பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். இதையடுத்து விமானம் சிட்னியை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.



இந்த திடீர் வயிற்றுப்போக்குப் பிரச்சினையால் பயணிகள் அனைவரும் பெரும் பீதியடைந்தனர். குவான்டஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானத்தில் ஒரு குழுவினர் மொத்தமாக டிக்கெட் எடுத்துப் பயணித்தனர்.

சன்டியாகோவிலிருந்து புறப்பட்ட விமானம் சிட்னி நோக்கி வந்து கொண்டிருந்தது. விமானம் சிட்னி விமான நிலையத்தை நெருங்கியபோது திடீரென அந்த 30 பேருக்கும் வயிற்று வலியும், வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.



இதனால் விமானமே பரபரப்பானது. இதையடுத்து சிட்னி விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. வைத்தியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.



விமானம் தரையிறங்கியதும் அத்தனை பேரையும் மருத்துவர்கள் அழைத்துச் சென்று அவசர சிகிச்சை அளித்தனர். இந்த 30 பேரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எங்கோ வெளியில் சாப்பிட்டுள்ளனர். அந்த சாப்பாட்டில்தான் பிரச்சினை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் வாந்தி, வயிற்றுப் போக்கால் விமானத்திலும், விமான நிலையத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.