நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மூவர் பிரதான கட்சிகளினூடாக போட்டியிடவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஊடாக அப்துல் பாரியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடாக நகரசபையின் உப தலைவராக இருந்த எம். எம்.ரதனும் முஸ்லீம் காங்கிரசின் ஊடாக எம்.முனௌபரும் போட்டியிடவுள்ளனர்.
இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தலைவராக இருந்த து.நடராஜசிங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலும் வவுனியா சிங்கள பிரதேச சபையை சேர்ந்த எஸ்.ஜெயதிலக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும்போட்டியிடவுள்ளனர்.