
பேலியகொட-நீர்கொழும்பு வீதியில் போரணுகொட்டுவத்தை பிதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த 21 வயது இளைஞர் மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பழிவாங்கும் விதமாக ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு இலக்கு தவறியதால் அவ்விடத்தில் இருந்த வேறு இரண்டு நபர்கள் இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸர் மேற்கொண்டுள்ளனர்.





