கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி: பொறாமையால் வந்த வினை!!

300

killed_lawyer_002

பிரித்தானியாவில் பொறாமை காரணமாக கணவரை மனைவி கத்தியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருபவர் 51 வயதான டேவிட் எட்வர்ட்.இவரது மனைவி 42 வயது ஷாரோன், இவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஏற்பட்டும், சண்டையிட்டும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டில் விடுமுறையை கழிக்க இருவரும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.விடுமுறையை கொண்டாடிவிட்டு வந்த டேவிட்டை அவர் பணிபுரிந்த நிறுவனம் வேலையைவிட்டு தூக்கியதாக மனைவியிடம் கூறியுள்ளார்.இதன் பின்னர் கணவன் மனைவி இடையே தினசரி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது, ஷாரோன் தமது கணவரை கண்மூடித்தனமாக தாக்கியும் வந்துள்ளார்.

சம்பவத்தன்று இதுபோன்ற வாக்குவாதம் ஒன்று கைகலப்பாக மாறியுள்ளது. ஷாரோன் சமையலறை கத்தியால் டேவிட்டை தாக்கியுள்ளார்.மார்பில் கத்தியால் தாக்கிய பின்னரும் டேவிட் பொறுமையுடன் காயங்களில் இருந்து வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டு மனைவியுடன் பீயர் அருந்த சென்றுள்ளார்.

அங்கிருந்து வரும் வழியில் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அதன் அடுத்த நாள் காலையில் படுக்கை அறையில் டேவிட் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஷாரோன், தமது கணவரை கொலை செய்யும் நோக்கில் கத்தியால் தாக்கவில்லை என்றும்,

அவரது வேலை பறிபோன ஆத்திரத்திலும், சமூகத்தில் தம்மை எவரும் மதிக்காமல் போவார்களோ என்ற பயத்தில்தான் கணவரை தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.