
கொஸ்கொட – இதுருவ – யாலேகம கடற்பகுதியில் நீராடச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 64 வயதான குறித்த நபர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது பலபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.





