8 மாத கர்ப்பிணி மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கொடூர கணவன்!!

333

1 (15)

ஜேர்மனியில் 8 மாத கர்ப்பிணி மனைவியை தனது நண்பருடன் இணைந்து உயிருடன் எரித்து கொலை செய்த குற்றத்திற்கு நீதிமன்றம் இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஜேர்மனி தலைநகரான பெர்லினுக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் 20 வயதான நபர் ஒருவர் தன்னுடைய 19 வயதான மரியா என்ற பெயருடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. இந்நிலையில் மனைவி கர்ப்பம் தரித்து 8 மாதத்தை அடைந்துள்ளார்.மனைவி தன்னை எதிர்த்து பேச தொடங்கியதால் ஆத்திரம் அடைந்த கணவன் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் திகதி ‘நான் திருந்தி விட்டேன். இனி நாம் இருவரும் சண்டையிடாமல் மகிழ்ச்சியாக வாழலாம். நமக்கு பிறக்கவுள்ள குழந்தைக்கு புதிய ஆடைகளை வாங்கி வரலாம்” என மனைவியை கணவன் அழைத்துள்ளார்.கணவனின் சதி திட்டத்தை அறியாத அந்த அப்பாவி கர்ப்பிணி பெண் ‘இனி நம் வாழ்க்கை பிரகாசமாக மாறப்போகிறது’ என உற்சாகத்தில் மூழ்கியவாறு கணவனுடன் புறப்பட்டார்.

ஆனால், நகரத்திற்கு செல்லாமல் தன்னுடைய மனைவியை அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கே, ஏற்கனவே திட்டமிட்டவாறு அவரது நண்பர் காத்திருந்துள்ளார். நடக்க போகும் விபரீதத்தை திடீரென உணர்ந்த மனைவி கணவனிடம் கெஞ்சியுள்ளார். ‘நம்முடைய குழந்தை வயிற்றில் வளர்ந்து வருகிறது. தயவு செய்து என்னை என்ன வேண்டுமென்றாலும் செய்துக்கொள்ளுங்கள். நம் குழந்தையை ஒன்றும் செய்யாதீர்கள்” என கதறி அழுதுள்ளார்.

மனைவியின் கதறலை கண்டுக்கொள்ளாத அந்த கொடூரமான கணவன் முதலில் தான் கொண்டு வந்திருந்த கத்தியை கொண்டு தாக்கியுள்ளான்.பின்னார், தன்னுடைய மனைவியை நண்பன் பிடித்துக்கொள்ள அவர் உடல் முழுவதும் எரிவாயு எண்ணையை உற்றி தீப்பற்ற வைத்துள்ளான். கர்ப்பிணி மனைவி தன் வயிற்றை பிடித்துக்கொண்டு துடி துடித்து உயிரிழந்துள்ளார்.

கொடூரமான கணவன் மற்றும் அவரது நண்பனின் இந்த இரக்கமற்ற சம்பவம் தொடர்பான இறுதி வழக்கு கடந்த செவ்வாய்கிழமை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.வழக்கினை விசாரித்த நீதிபதிகள், இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.