
போலிக் கடவுச்சீட்டு மூலம் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த இரண்டு நபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.போலி தகவல்களை வழங்கி அதன் மூலம் பெறப்பட்ட கடவுச்சீட்டு மூலம் டுபாய் நாட்டிற்கு சென்ற நபர், நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே நேற்று மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, போலி கடவுச்சீட்டு மூலம் ஜேர்மனிக்கு செல்ல முயற்சித்த ஒருவர் துருக்கியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர்கள் இருவரும் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





