
நாமக்கலில் சாமியார் ஒருவர் வீதியில் நிர்வாணமாக வலம் வந்ததால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த, பொத்தனூர் வடக்கு தெருவைச் சேர்ந்த வெங்கடாச்சலம், வேலூரில் கைரேகை மற்றும் ஜாதகம் பார்த்து வருகிறார்.
மனைவியை பிரிந்து தனியாக வசித்து வரும் அவர், கடந்த சில நாட்களாக வீட்டில் இரவு நேரத்தில் சத்தமாக பக்தி பாடல் பாடுவது, நிர்வாணமாக கண்களை மூடி தியானம் செய்து கொண்டே வீட்டின் முன் நடந்து வருவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பொலிசில் அவர் மீது புகார் அளித்துள்ளனர். பொலிசார் நிர்வாண சாமியாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.





