12ம் வகுப்பு பரீட்சையை ஒன்றாக எழுதும் தந்தை-மகன்!!

1219

Dad and Sun

தமிழகத்தில் விரைவில் தொடங்க உள்ள 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், தந்தையும், மகனும் ஒன்றாக தேர்வு எழுதவுள்ளனர். மார்ச் 4ம் திகதி முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்த குணசேகரன் (52) என்பவருக்கு அருள்மணி என்ற மனைவியும் செல்வம், தமிழீழம் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இளைய மகன் தமிழீழம் கோபியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். வரவுள்ள பொது தேர்வில் அவர் பரீட்சை எழுதுகிற நிலையில், அவரது தந்தை குணசேகரனும் 12ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்.

7ம் வகுப்பு வரை படித்திருந்த குணசேகரன் கடந்த 2013ம் ஆண்டு 8ம் வகுப்பு பொது தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தொடர்ந்து 2014ம் ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதி அதிலும் வெற்றி பெற்றார்.

இப்போது தனது மகனை போலவே தானும் 12ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளார். எனவே, தந்தை–மகன் இருவரும் தேர்வுக்காக படித்து வருகின்றனர்.