சகல செய்தி இணையத்தளங்களும் பதிவு செய்துகொள்வது அவசியம்!!

597

Mi

இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக வெகுசன ஊடக அமைச்சில் பதிவுசெய்துகொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அமைச்சின் கீழ் பதிவு செய்துக்கொள்வதன் மூலம், அனைத்து செய்தி வலைத்தளங்களும் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் நெறிமுறைக்கமைய அங்கிகாரத்தை பெற்று செயற்பட முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 31ம் திகதிக்கு பின்னர், பதிவுசெய்யப்படாத இணையதளங்கள் சட்டத்துக்கு முரணானவையாக கருதப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.