கடந்த 10 வருடங்களில் மஞ்சள் கடவை விபத்துக்களில் 917 பேர் பலி!!

837

yellow-crossing

கடந்த 10 வருடங்களில் மஞ்சள் கடவையில் இடம்பெற்ற விபத்துக்களில் 917 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டு வரை இடம்பெற்ற விபத்துக்களிலே அதிகளவானோர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 2442 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான விபத்துக்களை தடுக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.