
முல்லைத்தீவு முத்தையன்கட்டை சேர்ந்த இளைஞன் ஒருவர் கொழும்பில் வேலை செய்துவிட்டு விடுமுறைக்கு வீடு சென்றபோது, புகையிரதத்தில் வைத்து அவருடைய பணப்பை கொள்ளையர்களினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினால் அவருடைய வாகன அனுமதிப் பத்திரம் அடையாள அட்டை வங்கிஅட்டை சிறு தொகைப்பணம் என்பன திருட்டுபோய்யுள்ள நிலையில்,
குறித்த இளைஞனின் வங்கி அட்டையை பயன்படுத்தி 42000 ருபாய் பெறுமதியான பொருட்களை திருடர்கள் கொள்வனவு செய்துள்ளதாக இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான முறைப்பாட்டை நேற்றுமுன்தினம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளாதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.





