
மாணவர்களை வரிசையில் செல்லுமாறு எச்சரித்த ஆசிரியர் ஒருவர், மாணவன் ஒருவரின் கல் தாக்குதலில் காயமடைந்து சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில் நடந்த இந்தச் சம்பவத்தில் கல்லால் தாக்கிய மாணவன் அதே பாடசாலையில் தரம் 12இல் கல்வி பயிலும் 17 வயது மாணவன் எனவும், அவர் வரிசையை விட்டு விலகி நடந்ததால் ஆசிரியர் எச்சரித்ததாகவும் அதனால் கோபமடைந்தவர் அங்கு கிடந்த கல்லை எடுத்து ஆசிரியர் மீது எறிந்தார் எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை மேற்கொண்ட மாணவனின் தாய் அதே பிரதேசத்திலுள்ள வேறொரு பாடசாலையில் அதிபராக பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.





