
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் தான் திருமணம் என 77 வயது முதியவர் கடந்த 46 வருடங்களாக விடாப்பிடியாக தேர்வு எழுதி வருகிறார்.ராஜஸ்தான் மாநிலம் ஹோகரி கிராமத்தை சேர்ந்த ஷிவ் சரண் யாதவ் (77) என்ற முதியவர், 1968 ஆம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்.
இந்த ஆண்டு 10 ஆம் திகதி யாதவ் தான் எழுதும் தேர்வில் தேர்ச்சி அடைவேன் என நம்புகிறார்.10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த பின்தான் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சபதம் செய்து இருந்தார், ஆனால் இது வரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை அவருக்கு இந்த கணக்குபாடம் தான் மிக சவாலாக அமைந்து வருகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு முறையும் நான் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். ஆனால் வேறு பாடத்தில் தோல்வி அடைந்து விடுகிறேன். குறிப்பாக நான் கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தில் போதுமான மதிப்பெண் பெற்றிருந்தேன்.ஆனால் இந்தி மற்றும் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்து விட்டேன். இந்த முறை அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவேன் என நம்புகிறேன்.இந்த முறை நான் எனது மணகமளை பார்ப்பேன், நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என 77 வயது பிரமச்சாரி கூறி உள்ளார்.





