பிறந்த 10 நாளில் முட்டையிட்ட கோழி குஞ்சு!!!

1690

chick

தமிழ்நாட்டில் கோழிக் குஞ்சு ஒன்று முட்டையிட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்தின் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், சுமார் 10 வருடங்களாக கறிக் கோழி விற்பனை செய்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த வாரம் பெங்களூரில் இருந்து சுமார் 6ஆயிரம் கோழி குஞ்சுகளை வாங்கி வந்துள்ளார். இதில் ஒரு கோழிக் குஞ்சு முட்டையிட்டுள்ளது.இந்த கோழிக் குஞ்சு பிறந்து 10 நாட்கள் தான் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. வழக்கமான கோழி முட்டையானது 60 கிராம் எடையில் இருக்குமாம். ஆனால் இந்த முட்டையானது, 6.5 கிராம் தான் இருக்கின்றதாம்.

இதனை அறிந்த கிராம மக்களும் கிராமத்தை சுற்றியுள்ள மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து அதிசயமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒருபுறம் வழக்கம் போல நம் ஆட்கள் அங்கயும் பாலியல் பலாத்காரமா என்று சமூக தலங்களில் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.